கடற்படை தளபதி ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பை முடித்த 1732 பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறுகிறது. இன்று (2024 அக்டோபர் 14) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இரண்டாவது அமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்படி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிபர் ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு) மற்றும் உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார ஆகியோர் கடற்படைத் தளபதியை வைபவத்திற்கு வரவேற்று பட்டமளிப்பு விழாவிற்காக பிரதான மண்டபத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வின் சிறந்த பட்டதாரிக்கு தங்க விருதை வழங்கி வைத்த பின்னர், பட்டமளிப்பு விழாவில் கடற்படை தளபதி உரையாற்றினார்.