இந்தியாவில் ராயல் நெதர்லாந்து தூதரகத்தில் இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இந்தியாவில் ராயல் நெதர்லாந்து தூதரகத்தில் இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகரான கப்டன் Robert van Bruinessen இன்று (2024 அக்டோபர் 11) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், கடற்படைத் தளபதி மற்றும் கப்டன் Robert van Bruinessen ஆகியோருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான சுமுகமான கருத்துப் பரிமாற்றத்தின் பின்னர், நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்புக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வுக்காக கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய மற்றும் இந்திய, இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ராயல் நெதர்லாந்து தூதரகத்தின் பிரதித் தலைவர் திரு. Iwan Rutjens ஆகியோரும் கலந்து கொண்டனர்.