ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

இலங்கை கடற்படையில் 35 வருட சேவையை நிறைவு செய்து ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க இன்று (2024 அக்டோபர் 11) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.

1989 ஆம் ஆண்டில், 19 ஆவது கெடட் ஆட்சேர்ப்பில் கெடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்து கொண்ட ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க, தனது 35 வருட சேவையின் போது செயல் துணை கண்காணிப்பாளர் கப்பல்துறை (தெற்கு), கடல்சார் பொறியியல் துணை இயக்குனர், துணை கண்காணிப்பாளர் கப்பல்துறை (மேற்கு), துணை இயக்குனர் பொறியியல் (புதிய கட்டுமானம்), துணை கண்காணிப்பாளர் கப்பல்துறை (கிழக்கு), இயக்குனர் பொறியியல் சேவை, கொமடோர் கண்காணிப்பாளர் கப்பல்துறை (வட மத்திய), கொமடோர் கண்காணிப்பாளர் கப்பல்துறை (வடக்கு), கொமடோர் கண்காணிப்பாளர் கப்பல்துறை (மேற்கு), இயக்குனர் கடல் பொறியாளர், பணிப்பாளர் நாயகம் பொறியாளர் மற்றும் துணைத் தலைமை அதிகாரி ஆகிய முன்னணி பதவிகளை வகித்த ஒரு புகழ்பெற்ற தலைமை அதிகாரியுமாவார்.