கௌரவ ஜனாதிபதியை கடற்படைத் தளபதி மரியாதையுடன் சந்திப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இலங்கையின் முப்படைகளின் சேனாதிபதியும், இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியுமான, அதிமேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களை இன்று (2024 ஒக்டோபர் 04) ஜனாதிபதி செயலகத்தில் மரியாதை நிமித்தம் முதல் சந்திப்பை மேற்கொண்டார்.

இதன்படி, இராணுவ மரபுகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்த முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கை கடற்படையின் சிறந்த பங்களிப்பு உட்பட தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்கள் தொடர்பில் கடற்படைத் தளபதி மற்றும் கௌரவ ஜனாதிபதிக்கு இடையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

மேலும், இந்த முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பை அடையாளப்படுத்தும் வகையில் கடற்படைத் தளபதியினால் கௌரவ ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.