கடற்படை நலத்துறை பிரிவால் இரண்டு ஊனமுற்ற கடற்படை வீரர்களின் குழந்தைகளுக்கு 02 மடிக்கணினிகள் வழங்கப்பட்டது

யுத்தத்தின் போது ஊனமுற்ற இரண்டு கடற்படை வீரர்களின் குழந்தைகளுக்கு இரண்டு மடிக்கணினிகள் Laptop (02) கடற்படை நலத்துறை பிரிவால் வழங்கப்பட்டது. வைஸ் அட்மிரல் எஸ்.எம்.பி.வீரசேகர (ஓய்வு) அவர்களால் இலங்கை கடற்படை நலன்புரி திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட இந்த மடிக்கணினிகள் Laptop 2024 ஒக்டோபர் 03 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது, பணிப்பாளர் நாயகம் சேவைகள், ரியர் அட்மிரல் பிரியால் விதானகேவினால் சிறுவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன்படி, கடமையில் ஈடுபட்டிருந்த போது காயமடைந்த கடற்படை வீரர் ஆர்.டீ.டப் மனோரஞ்சன் மற்றும் கடற்படை வீரர் ஜே.எல்.டீ.எச்.கே பெரேரா ஆகியோரின் பிள்ளைகளின் எதிர்கால கல்வியை மேம்படுத்துவதற்காக குறித்த மடிக்கணினிகள் Laptop வழங்கி வைக்கப்பட்டன.