கடற்படைத் தளபதி பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளரைச் சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சு செயலகத்தில் இன்று (2024 ஒக்டோபர் 02) பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக கடமையாற்றும் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தாவை (ஓய்வு) உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இராணுவ மரபுகளின்படி நடத்தப்பட்ட இந்த முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பில், பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தா அவர்களுக்கு (ஓய்வு) வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா வாழ்த்து தெரிவித்தார். பின்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கடற்படையின் பங்கு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கடற்படைத் தளபதி மற்றும் தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பொன்று இடம்பெற்றது.

மேலும், கடற்படைத் தளபதி பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளரை சந்தித்த இந்த முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பின் அடையாளமாக இரு தரப்பினருக்கும் இடையில் நினைவு பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.