பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளரின் பதவியேற்பு நிகழ்வில் கடற்படை தளபதி பங்கேற்பு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஆயுதப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான திரு. அனுர குமார திஸாநாயக்க அவர்கள் 2024 செப்டம்பர் 23 முதல் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவை (ஓய்வு) நியமித்தார். அவருடைய கடமைகளை பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்து கொண்டார்.

அதன்படி, எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (ஓய்வு) 2024 செப்டெம்பர் 23 ஆம் திகதி அக்குரேகொட பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படை தளபதிகள் உட்பட பாதுகாப்பு பிரதானிகளுடன் தற்போதைய பாதுகாப்பு நிலைமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மேலும், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.