கடற்படையின் இரத்த தானம் திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி இன்று (2024 செப்டம்பர் 14,) வட மத்திய கடற்படை கட்டளை தலைமை வளாகத்தில் இடம்பெற்றது.

அதன்படி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் கடற்படையின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார அவர்களின் மேற்பார்வையில் இந்த இரத்த தான நிகழ்ச்சி நடைபெற்றது. மன்னார் இரத்த வங்கியின் கோரிக்கைகளுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், கட்டளை வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் மன்னார் இரத்த வங்கி ஊழியர்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சமூக சேவையின் வெற்றிக்காக வடமத்திய கடற்படை கட்டளையில் பெருமளவிலான கடற்படை வீரர்கள் இரத்த தானம் செய்ய முன்வந்து பங்களித்தனர்.