ரியர் அட்மிரல் பூஜித விதான கடற்படை சேவையிலிருந்து கௌரவத்துடன் ஓய்வு பெற்றார்

36 வருட கால சேவையை நிறைவு செய்து ரியர் அட்மிரல் பூஜித விதான இலங்கை கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 செப்டம்பர் 13) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் பூஜித விதான அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.

1988 ஆம் ஆண்டில், 18 ஆவது கெடட் ஆட்சேர்ப்பில் கெடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்து கொண்ட ரியர் அட்மிரல் பூஜித விதான, தனது 36 வருடங்களுக்கும் மேலான சேவையின் போது பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கப்பல்களின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். மேலும், இவர் அவர் கட்டளை செயல்பாட்டு அதிகாரி (கிழக்கு), இலங்கை கடற்படை கப்பல் நிபுண நிறுவனத்தின் பயிற்சி கெப்டன், கெப்டன் செயல்பாட்டுத் துறை (வடக்கு), கடற்படை கட்டளை அதிகாரி (ஹம்பாந்தோட்டை) மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு அதிகாரி (ஹம்பாந்தோட்டை துறைமுகம்), கடற்படை நிர்வாகத்தின் பணிப்பாளர், , துணைப் பணிப்பாளர் கிழக்கு கடற்படை கட்டளை தளபதி மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு அதிகாரி (திருகோணமலை துறைமுகம்), இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகிய முன்னணி பதவிகளை வகித்த ஒரு புகழ்பெற்ற தலைமை அதிகாரியுமாவார்.