இராஜரீகமான இலங்கை கடற்படையின் கடற்படை வீரர் பி.ஏ.டி.விஜேதிலக (ஓய்வு) கடற்படை தளபதியை சந்தித்தார்

இராஜரீகமான இலங்கை கடற்படையில் கடமையாற்றிய கடற்படை வீரர் பி.ஏ.டி.விஜேதிலக (ஓய்வு) இன்று (2024 செப்டெம்பர் 12) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

1951 ஆம் ஆண்டு இராஜரீகமான இலங்கை கடற்படையில் இணைந்து கொண்ட கடற்படை வீரர் பி.ஏ.டி.விஜேதிலக (ஓய்வ) 1977 வரை கடற்படையில் பணியாற்றியதோடு, இராஜரீகமான இலங்கை கடற்படையின் முதலாவது கப்பலான "விஜய" கப்பலின் நிறுவனக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.

இதன்படி, கடற்படைத் தளபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட கடற்படை வீரர் பி.ஏ.டி.விஜேதிலக (ஓய்வு) கடற்படைத் தலைமையகத்திற்கு அன்புடன் வரவேற்கப்பட்டதுடன், அவரது சேவையைப் பாராட்டி நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் கடற்படை வீரர் பீ.ஏ.டி.விஜேதிலகவின் (ஓய்வு) மகனான தலைமைக் காவல் அதிகாரி பி.சி.டி.டி விஜேதிலகவும் கலந்துகொண்டார்.