இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவன வளாகத்தில் நிறுவப்பட்ட கட்டளை பல் அறுவை சிகிச்சை அறை திறந்து வைக்கப்பட்டது

வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவன வளாகத்தில் நிறுவப்பட்ட வடக்கு கடற்படை கட்டளை பல் அறுவை சிகிச்சை அறையின் திறப்பு விழா 2024 செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை பல் அறுவை சிகிச்சை 1997 முதல் இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்தில் அமைந்துள்ளதுடன், வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை வீரர்களுக்கு பல் மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்வதில் ஈடுபட்டுள்ள நிர்வாக பணிகளை குறைப்பதற்காக இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவன வளாகத்தில் இந்த கட்டளை பல் அறுவை சிகிச்சை அறை நிறுவப்பட்டது.

அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், கட்டளை சிவில் பொறியியல் துறையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் கோவிட்-19 நோயாளிகளை தனிமைப்படுத்த பயன்படுத்தப்பட்ட கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு வடக்கு கடற்படை கட்டளை பல் அறுவை சிகிச்சை அறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவனத்தில் நிறுவப்பட்டது.

மேலும், வட கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் ஜயந்த பண்டார மற்றும் கடற்படை பல் சேவைகள் பணிப்பாளர் கொமடோர் நயணா விஜேதோரு உட்பட வட கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.