மடுகந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெறும் இளைஞர்களுக்கான உயிர்காப்பு மற்றும் முதலுதவி பயிற்சி பட்டறையொன்று கடற்படையினரால் நடத்தப்பட்டது

வவுனியா மடுகந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெறும் இளைஞர்களுக்கான உயிர்காப்பு மற்றும் முதலுதவி பயிற்சி பட்டறையொன்று 2024 ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்டது.

இதன்படி, இலங்கை உயிர்காப்பு சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, புனர்வாழ்வு பணியகத்துடன் இணைந்து, புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் வாழ்வில் பல்வேறு வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதையும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் நோக்கமாகக் கொண்டு, கங்கேவாடிய விரைவு நடவடிக்கை படகுகள் படையணியில் உள்ள கடற்படை, பேரழிவு மேலாண்மை பயிற்சி பாடசாலையின் கடற்படையினரால் இந்த உயிர்காக்கும் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.