ஊனமுற்றுள்ள ஓய்வு பெற்ற கடற்படை வீர்ரொருவருக்கு சக்கர நாற்காலியொன்று நன்கொடையாக வழங்கப்பட்டது

யுத்தத்தின் போது ஊனமுற்றுள்ள ஓய்வு பெற்ற கடற்படை வீரர் எச்.ஜே.புஷ்பகுமாரவுக்கு சக்கர நாற்காலியொன்று வழங்கும் நிகழ்வு இன்று (2024 ஆகஸ்ட் 26) குறித்த சிரேஷ்ட மாலுமியின் இல்லத்தில் பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் பிரியால் விதானகே தலைமையில் நடைபெற்றது.

ஓய்வுபெற்ற சிரேஷ்ட மாலுமியான எச்.ஜே.புஷ்பகுமார கடற்படை நலன்புரி திணைக்களத்தின் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கடற்படையின் மின்சார வடிவமைப்பு பிரிவினால் தயாரிக்கப்பட்ட இந்த மின்சார சக்கர நாற்காலி கடற்படை நலன்புரி திணைக்களம் மற்றும் கடற்படை சமூக பணி நிதியத்தின் நிதி பங்களிப்புடன் வழங்கப்பட்டது.

வடமேற்கு கடற்படையின் பதில் கட்டளைத் தளபதி கொமடோர் தம்மிக்க விஜேவர்தன மற்றும் கடற்படை நலன்புரி பணிப்பாளர் கெப்டன் இந்திக்க எதிரிசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.