ரியர் அட்மிரல் அனில் போவத்த கடற்படை சேவையிலிருந்து கௌரவத்துடன் ஓய்வு பெற்றார்

33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் அனில் போவத்த தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஆகஸ்ட் 26) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் அனில் போவத்த அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.

09 ஆவது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கெடட் அதிகாரியாக 1991 ஆம் ஆண்டில் கடற்படையில் இணைந்து கொண்ட ரியர் அட்மிரல் அனில் போவத்த, தனது 33 வருடங்களுக்கும் மேலான சேவையின் போது பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கப்பல்களின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். மேலும் இவர் சிரேஷ்ட பணியாளர் அதிகாரி (பணியாளர்), இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தின் கட்டளை அதிகாரி மற்றும் பயிற்சி கேப்டன், கடற்படை கட்டளை அதிகாரி (தீவுகள்), கொமடோர் கடல் பயிற்சி ஏவுகணை கட்டளை, மூத்த ஆலோசகர் கொழும்பு தேசிய பாதுகாப்பு அகாடமி (கடற்படை), கிழக்கு கடற்படைக் கட்டளைத் துணைத் தளபதி, கிழக்கு கடற்படைக் கட்டளையின் செயல் தளபதி மற்றும் நிர்வாக பணிப்பாளர் நாயகம் ஆகிய முன்னணி பதவிகளை வகித்த ஒரு புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியுமாவார்.