கிழக்கு கடற்படை கட்டளையின் பதில் தளபதியாக ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ கடமைகளை பொறுப்பேற்றார்

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று (2024 ஆகஸ்ட் 23) கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கடற்படை கட்டளைத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கடற்படை மரபுப்படி கிழக்கு கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை வரவேற்ற பின்னர், அந்த கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட, கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை கையளித்தார்.

மேலும், கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகளின் வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர், ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட, கடற்படை மரபுப்படி கிழக்கு கடற்படை கட்டளையிலிருந்து பிரியாவிடை பெற்றார்.