இந்தியாவின் புது தில்லியில் கொரியா குடியரசு தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இந்தியாவின் புது தில்லியில் உள்ள கொரிய குடியரசு தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகரான Lieutenant Colonel Han Jonghun இன்று (2024 06 ஆகஸ்ட்) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.

Lieutenant Colonel Han Jonghun, இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தில் கொரியா குடியரசு பாதுகாப்பு ஆலோசகராக, இந்தியாவின் புது தில்லியில் உள்ள கொரியா குடியரசின் தூதரகத்தில் கடமையாற்றுகிறார். இதன்படி, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது,

கடற்படை தளபதி மற்றும் கொரிய குடியரசின் பாதுகாப்பு ஆலோசகருக்கும் இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.