கடற்படையின் பங்களிப்புடன் காலி கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டமொன்று 2024 ஆகஸ்ட் 03 ஆம் திகதி காலி கடற்படை தளத்தில் இருந்து காலி கோட்டை மற்றும் அம்பாந்தோட்டை நகர எல்லை வரை நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன்படி, தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வாவின் மேற்பார்வையின் கீழ், இலங்கை கடற்படைக் கப்பல் தக்ஷின மற்றும் காவந்திஸ்ஸ நிருவனங்களின் கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கடற்கரை சுத்தப்படுத்தும் திட்டம் முலம் காலி கடற்படை முகாமில் இருந்து காலி கோட்டை மற்றும் அம்பாந்தோட்டை நகர எல்லைக்குட்பட்ட கரையோரத்தில் சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உட்பட பல திடக்கழிவுகள் அகற்றப்பட்டது.