அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசிய பிராந்தியத்திற்கான உதவி செயலாளர் கடற்படை தளபதியை சந்தித்தார்

அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் உதவிச் செயலாளர் திருமதி Karen Radford அவர்கள் இன்று (2024 ஆகஸ்ட் 01) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இதன்படி, கடற்படைத் தலைமையகத்திற்கு வருகைதந்த அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உதவிச் செயலாளர் திருமதி Karen Radford அவர்களை கடற்படைத் தளபதி வரவேற்றதை அடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான நட்பு ரீதியான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

மேலும், இந்நிகழ்வில் கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ், கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய உட்பட கடற்படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Amanda Johnston மற்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டதுடன், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் சின்னங்களும் பரிமாறப்பட்டன.