ரியர் அட்மிரல் நளீந்திர ஜயசிங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

இலங்கை கடற்படையில் 33 வருட சேவையை நிறைவு செய்து ரியர் அட்மிரல் நளீந்திர ஜயசிங்க இன்று (2024 ஜூலை 30,) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் நளீந்திர ஜயசிங்க அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.

1991 ஆம் ஆண்டில், 21 ஆவது கெடட் ஆட்சேர்ப்பில் கெடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்து கொண்ட ரியர் அட்மிரல் நளீந்திர ஜயசிங்க, தனது 33 வருட சேவையின் போது பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கப்பல்களின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். மேலும், இவர் சிரேஷ்ட பணியாளர்கள் அதிகாரி செயற்பாடுகள், இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் செயற்பாடுகள், கடற்படை மற்றும் கடல்சார் விஞ்ஞான பீடத்தின் பயிற்சி கப்டன், பிரதி பணிப்பாளர் கடற்படை பணியாளர், இந்தோனேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், வடமத்திய கடற்படை கட்டளையின் பிரதி தளபதி, நிர்வாக பணிப்பாளர் நாயகம் மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ஆகிய முன்னணி பதவிகளை வகித்த ஒரு புகழ்பெற்ற தலைமை அதிகாரியுமாவார்.