‘சயுருசர’ வின் 48 வது பதிப்பு வெளியிடப்பட்டது

கடற்படை ஊடக இயக்குனர் அலுவலகத்தினால் வெளியிடப்படுகின்ற சயுருசர சஞ்சிகையின் 48வது பதிப்பு அதன் பிரதம ஆசிரியர் கமாண்டர் (தன்னார்வ) எஸ்.ஆர்.சுதுசிங்கவினால் இன்று (2024 ஜூலை 23) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் வழங்கப்பட்டது.

கடற்படையினரின் வாசிப்பு மற்றும் எழுதும் ஆர்வத்தை வளர்ப்பதுடன், கடற்படையின் சமூகப் பணித் திட்டங்கள் உட்பட சிறப்பு சந்தர்ப்பங்கள் குறித்து அவர்களின் படைப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் கடற்படை ஊடக இயக்குனர் அலுவலகத்தினால் அரையாண்டுக்கு ஒருமுறை இந்த சயுருசர சஞ்சிகையை வெளியிடப்படுகிறது.

மேலும், இம்முறை பதிப்பில் கடற்படை வீரர்களின் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் படைப்பு உரைநடை, கவிதைகள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றின் வளமான தொகுப்புகள் உள்ளது.