வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களுக்கான நலன்புரி வசதிகள் விரிவுபடுத்தப்படும்

வட மத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட நிறுவனங்களில் கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்ட புதிய வசதிகள் 2024 ஜூலை 22, அன்று வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி, இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிருவனத்திக்கு சொந்தமான இரணைதீவு கரையோர கண்காணிப்பு நிலைய கடற்படையினருக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு, வலேபாடு கடற்படை நிலையத்திற்கு ஒரு சமையலறை, இலங்கை கடற்படை கப்பல் புஸ்ஸதேவ நிலையத்திற்கு சொந்தமான நரிவிலகுழம் முகாமுக்கு ஒரு சமையல் அறை, இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிருவனத்திக்கு சொந்தமான பேசாலை நிலையத்திற்கு ஒரு சமையலறை மற்றும் இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னா நிறுவனத்தின் மாலுமிகளுக்கான வசிப்பிடம் ஆகியவை வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.