ரியர் அட்மிரல் சமன் பெரேரா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் சமன் பெரேரா தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜூலை 13)ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் சமன் பெரேரா அவர்களுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.

1989 ஆம் ஆண்டில், 19 வது கெடட் ஆட்சேர்ப்பில் கெடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்து கொண்ட ரியர் அட்மிரல் சமன் பெரேரா, தனது 35 வருடங்களுக்கும் மேலான சேவையின் போது பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கப்பல்களின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். இவர் பொது முகாமையாளர் திசைகாட்டி விருந்தோம்பல் சேவை, செயற்படும் கடற்படை கட்டளை அதிகாரி (வெலிசர), கடற்படை துணை இயக்குனர், இலங்கை கடற்படை பயிற்சி நிறுவனத்தின் தளபதி, இயக்குனர் கடற்படை பணியாளர், வடக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு அதிகாரி (காங்கேசந்துறை), கடற்படை வெளியீட்டு கட்டளை கொடி அதிகாரி, பணிப்பாளர் ஜெனரல் பணியாளர், தன்னார்வ கடற்படையின் தளபதி மற்றும் மேற்கு கடற்படை கட்டளை தளபதி ஆகிய முன்னணி பதவிகளை வகித்த ஒரு புகழ்பெற்ற தலைமை அதிகாரியுமாவார்.