கடற்படையின் இரத்த தான திட்டம்

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி இன்று (2024 ஜூலை 12,) வடமேற்கு கடற்படை கட்டளை வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்படி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் கடற்படையின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நளிந்திர ஜயசிங்க அவர்களின் மேற்பார்வையில் இந்த இரத்த தான நிகழ்ச்சி நடைபெற்றது. மன்னார் மாவட்ட வைத்தியசாலை இரத்த மாற்று நிலையத்தின் தேவைக்காக அம் மருத்துவமனையின் கோரிக்கைகளுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், மன்னார் மாவட்ட வைத்தியசாலை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் கட்டளை வைத்தியசாலை ஊழியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சமூக சேவையின் வெற்றிக்காக வடமேற்கு கடற்படை கட்டளையில் பெருமளவிலான கடற்படை வீரர்கள் இரத்த தானம் செய்ய முன்வந்து பங்களித்தனர்.