மாலைதீவின் புதிய உயர்ஸ்தானிகர் இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான மாலைதீவின் புதிய உயர்ஸ்தானிகர் கௌரவ மசூத் இமாட் இன்று (2024 ஜூலை 10,) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.

இதன்படி, இலங்கைக்கான மாலைதீவின் புதிய உயர்ஸ்தானிகர் மசூத் இமாடியை கடற்படைத் தலைமையகத்திற்கு கடற்படைத் தளபதி வரவேற்றதுடன், கடற்படைத் தளபதி மற்றும் இலங்கைக்கான மாலைதீவின் புதிய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.