தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபை (NDDCB) மற்றும் பொலிஸ் உத்தியோகபூர்வ நாய்கள் பயிற்சி திணைக்களத்தின் வளங்களின் பங்களிப்புடன் இலங்கை கடற்படையின் நாய்கள் பிரிவு மற்றும் விசேட படகுகள் படையணியின் நாய்கள் பிரிவு ஆகியவற்றுக்கான விசேட போதைப்பொருள் கண்டறிதல் பயிற்சி அமர்வொன்று 2024 ஜூலை 01 முதல் 05 வரை கொழும்பு துறைமுகத்தில் உள்ள மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கடற்படையினரால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.