திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் புதிய தளபதியாக கொமடோர் ரொஹான் ஜோசப் பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் முதன்மை பயிற்சி நிறுவனமான திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் 40வது கட்டளை அதிகாரியாக கொமடோர் ரொஹான் ஜோசப் 2024 மே 30 ஆம் திகதி பதவியேற்றார்.

கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் 40வது தளபதியாக பதவியேற்பதற்கு முன்னர், கொமடோர் ரொஹான் ஜோசப் இந்தியாவின் புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றினார். கடற்படை மரபுப்படி கடற்படை மற்றும் கடல்சார் அகடமிக்கு புதிய கட்டளைத் தளபதியை வரவேற்று, அகடமியின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் கடமைகளை கொமடோர் ரொஹான் ஜோசப்பிடம் ஒப்படைத்தார்.

மேலும், கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே கடற்படை மரபுப்படி கடற்படை மற்றும் கடல்சார் அகடமிக்கு பிரியாவிடை வழங்கினார்.