சமய பழக்கவழக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடற்படை வெசாக் பண்டிகையை கொண்டாடுகிறது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கடற்படையினர் 2024 மே 23 ஆம் திகதி வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். மாத்தளை தர்மராஜ பிரிவெனவில் பௌத்தலோக வெசாக் வலயம், புத்த ரஷ்மி வெசாக் வலயம், தியவண்ணா உயன வெசாக் வலயம், மஹர-கடவத்த வெசாக் வலயம், கொள்ளுப்பிட்டி வழுகாராமய வெசாக் வலயம் ஆகிய நிகழ்வுகளில் அவர்கள் பங்குபற்றினர்.

இதன்படி, கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் மையப்படுத்தப்பட்ட புத்த ரஷ்மி வெசாக் நிகழ்வின் போது கடற்படையினர் அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணமயமான விளக்குகளை காட்சிப்படுத்துவதுடன், கங்காராம விகாரைக்கு முன்பாகவும், ஷங்ரிலா ஹோட்டலின் பின்புறம் உள்ள பெய்ரா ஏரியிலும் படகுகளில் இருந்து பக்தி பாடல்களை இசைத்தனர். மாத்தளை தர்மராஜ பிரிவேன் ஆலயத்தின் மையத்தில் நடைபெற்று வரும் அரச வெசாக் திருவிழாவிற்கு, கடற்படையினர் ஒளியூட்டல் போன்றவற்றை வழங்கினர்.

மேலும், வெசாக் பண்டிகையை முன்னிட்டு, ஜனாதிபதி செயலகத்தினால் காலி முகத்துவாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பௌத்த மத நிகழ்ச்சிகளுக்கு கடற்படையினர் பங்களிப்பு வழங்கி வருவதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2024 மே மாதம் 23 ஆம் திகதி குறித்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.