கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் தொழிநுட்ப பங்களிப்பு நடவடிக்கைகளால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்காக புதிய அடுப்பு அமைப்பதற்கான கட்டிடம் புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட்டு வருகின்றது

கடற்படையின் தொழிநுட்ப மற்றும் தொழிநுட்ப பங்களிப்பு நடவடிக்கைகளினால் புத்தளம், வனாத்தவில்லுவ பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்காக புதிய அடுப்பு அமைப்பதற்கு தேவையான கட்டிடங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்புகள் மற்றும் அதன் பராமரிப்பு பொது பாதுகாப்பு அமைச்சரான திரு. திரன் அலஸ் தலைமையில் 2024மே மாதம் 18ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

போதைப்பொருள் கடத்தலை நாட்டிலிருந்து ஒழிக்கும் நோக்கில், இலங்கை கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் அனைத்து பொலிஸ் நிலையங்களும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளினால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழிக்க அரசாங்கம் பாரிய செலவை சுமத்த வேண்டியுள்ளது. அதற்கு மாற்றாக விஷம் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக செயற்படும் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், கடற்படையின் தொழிநுட்ப மற்றும் தொழிநுட்ப பங்களிப்புடன், ஆகஸ்ட் 2024 இல் புத்தளம், வனாத்தவில்லுவ பிரதேசத்தில் புதிய அடுப்பு அமைப்பதற்கும் அதன் பராமரிப்பிற்கும் தேவையான கட்டிடங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்புகள் விரைவாக நிர்மாணிக்கப்பட்டதுடன், இது 2024 மே மாதம் 18ம் திகதி அன்று திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது.

அத்துடன், அடுப்பைச் செயற்படுத்துவதற்குத் தேவையான ஜெனரேட்டர்களை நிறுவுவதற்குத் தேவையான கட்டிட வசதிகளை நிர்மாணித்தல், பிரதான வாயில் மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல் மற்றும் தோட்ட அலங்காரப் பணிகளும் கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நளிந்திர ஜயசிங்க, கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.