திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்ற 33வது இளநிலை கடற்படை பணியாளர்கள் பாடநெறி வெற்றிகரமாக நிறைவு பெற்றதுடன், அதன் சான்றிதழ் வழங்கும் விழா 2023 நவம்பர் 18 ஆம் திகதி கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி கேட்போர் கூடத்தில் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளை அதிகாரி கொமடோர் புத்திக லியனகமகேவின் அழைப்பின் பேரில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஸ் டி சில்வாவின் தலைமையில் நடைபெற்றது.