இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2019 ஆகஸ்ட் 21 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் கைது செய்தது.

வடக்கு கடற்படை மூலம் வடக்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, இலங்கை பிராந்திய கடலில் சட்டவீரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்த இந்திய மீனவர்களை கைது செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்க எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் 25 மற்றும் 35 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை தொடர்ந்து நடத்திய ரோந்துகளின் விளைவாக, இலங்கை கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களில் எல்லா நேரங்களிலும் கடற்படை தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்.