கேரள கஞ்சா 16 கிலோ 5 கிராமுடன் இரண்டு நபர்கள் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் இன்று (ஆகஸ்ட் 20) யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் நடத்திய சோதனையின் போது 16 கிலோ 5 கிராம் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைது செய்துள்ளது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் போதைப்பொருள் பணியகம் யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் நடத்திய சோதனையின் போது, சந்தேக நபர்கள் ஒரு காட்டு பகுதியில் எட்டு (8) பொட்டலங்களில் மரைத்துவைத்திருந்த இந்த கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டனர். அத்துடன் இரண்டு சந்தேகநபர்கள் மற்றும் அவர்கள் பயணித்த கேப் வண்டி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

சந்தேக நபர்கள் 29 மற்றும் 42 வயதுடைய மன்னார் மற்றும் வவுனியாவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், மேலும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஊர்காவற்துறை போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.