வட மத்திய கடற்படையினரினால் இரத்த தான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது

இலங்கை கடற்படையின் வட மத்திய கட்டளை மருத்துவமனை மற்றும் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை இனைந்து 2019 ஆகஸ்ட் 17 ஆம் திகதி மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இரத்த தான முகாமொன்று ஏற்பாடு செய்துள்ளது.

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை இயக்குநரின் வேண்டுகோளின் பேரில் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த குருகுலசூரியவின் உத்தரவின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரத்த தான முகாமில் கிட்டத்தட்ட 60 கடற்படை வீரர்கள் ரத்த தானம் செய்ய முன்வந்தனர்.

வட மத்திய மாகாணத்தில் உள்ள அப்பாவி நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உன்னத காரணத்திற்காக மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் இயக்குநரும் பணியாளர்களும் மகத்தான பங்களிப்பை வழங்கினர்.