இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவின் இரண்டாவது மீட்பு பணி

இலங்கை கடற்படையின் கஜபாஹு கப்பல் மூலம் இன்று, (ஆகஸ்ட் 15) திடீரென்று கடலில் நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவரப்பட்டது.

அதன்படி, 2019 ஜூலை 26 ஆம் திகதி நீர்கொழும்பு மீன்வள துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட 'சதுமினி 1' என்ற பல நாள் மீன்பிடிப்படகில் இருந்த ஒரு மீனவர் நோய்வாய்ப்பட்டதாக மீன்வள மற்றும் நீர்வளத் துறையால் கிடைக்கப்பட்ட தகவலின்படி உடனடியாக இலங்கை கடற்படையின் 'கஜாபாஹு' கப்பல் மீனவரை கரைக்கு கொண்டுவர அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காலி கலங்கரை விளக்கத்திலிருந்து 155 கடல் மைல் தொலைவில் நோயாளி பாதுகாப்பாக கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவ வசதிகளுடன் கூடிய இந்த கப்பல், நோயாளிக்கு முதலுதவி அளித்து, பின்னர் துரித தாக்குதல் படகின் மூலம் தரைக்கு அழைத்து வரப்பட்டார்.மேலும் இந்த நோயாளி மருத்துவ சிகிச்சைக்காக கராபிட்டி போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும், இலங்கை கடற்படை எப்போதுமே இலங்கை பிராந்திய நீரில் துன்பகரமான மீன்பிடி நாட்டு மக்கள் மற்றும் கடற்படை சமூகங்களுக்கு உதவ, தேடல் மற்றும் மீட்பு பணிகள் மூலம், ஆதரவழிக்கின்றது.