இலங்கை கடற்படை கப்பல் அபீத II வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமாண்டர் சந்தன பாவுலுகே பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் அபீத II வின் புதிய கட்டளை அதிகாரியாக இன்று (ஆகஸ்ட் 05) கொமாண்டர் சந்தன பாவுலுகே பொறுப்பேற்றார்.

அதன்படி முன்னாள் கட்டளை அதிகாரி, கொமாண்டர் ஷானக ஜயதிலக மூலம் கடற்படைக் கப்பல் அபீத II அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் மேற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் ரோஹித பெரேரா கலந்து கொண்டார். கப்பலின் புதிய கட்டளை அதிகாரியால் பிரிவு சோதனையை தொடர்ந்து முறையான விழாவின் நடவடிக்கைகள் நிறைவடைந்தன.