தலவில புனித ஆனா தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு கடற்படை ஆதரவு

தலவில புனித ஆனா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா 2019 ஆகஸ்ட் 04 ஆம் அன்று ஏராளமான பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது, இந்த விழாவிற்கு இலங்கை கடற்படை உதவியது.

அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் உத்தரவின் பேரிலும், வடமேற்கு கடற்படை கட்டளை தளபதியின் மேற்பார்வையுடனும், வடமேற்கு கடற்படை கட்டளையின் அனைத்து கடற்படை தளங்கள் மற்றும் நிறுவனங்களிலிருந்தும் கடற்படை வீரர்கள் தங்கள் உதவிகளை வழங்கினார்கள்.

தேவாலயம் பொறுப்பான பாதிரியார்கள் மற்றும் பக்தர்கள் வருடாந்திர திருவிழாவை வெற்றிகரமாக்குவதற்கு வழங்கப்பட்ட உதவிகளுக்கு கடற்படைக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், இந்த வகையான மத நடவடிக்கைகளுக்கு எந்தவொரு உதவியையும் வழங்க கடற்படை தயாராக உள்ளது.