கேரள கஞ்சாவுடன் நபரொருவரை கைது செய்ய கடற்படை உதவி

வெத்திலகேனியின், மரதங்கேனி பிரதேசத்தில் 10.4 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கடற்படை, பொலீஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளுடன் இனைந்து இன்று (ஆகஸ்ட் 4) கைது செய்தனர்.

வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள பொலீஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து, சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை இன்று பரிசோதித்த போது அங்கு 5 பொதிகளில் மறைத்து வைத்திருந்த கேரள கஞ்சா தொகையை மீட்டுள்ளனர் .

சந்தேகநபர் யாழ்ப்பாணத்தின் பலை பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.மேலும் விசாரணைகளுக்காக சந்தேகநபர், மோட்டார் சைக்கிள் மற்றும் கேரள கஞ்சா தொகை பலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.