மேலும் மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது

ප්மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று அட்மிரல் (ஓய்வு பெற்ற) லட்சுமன் ஒபேசேகர தலைமயில் 2019 ஆகஸ்ட் 03, அன்று அனுராதபுரத்தின் கல்குலமவில் உள்ள ஸ்ரீ போதிமலுவ விஹாரை வளாகத்தில் திறக்கப்பட்டது.

‘Hope Project’ திட்ட அமைப்பின் நிதி நன்கொடையுடன் மற்றும் கடற்படை பணியாளர்களின் பங்களிப்புடன் கட்டப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம், அப்பகுதி மக்கள் மற்றும் புனித பகுதிக்கு வருகை தரும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுதத் குருகுலசூரிய மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.