பானம தடாகத்தில் காயமடைந்த வெளிநாட்டினருக்கு கடற்படை சிகிச்சை அளிக்கிறது

2019 ஆகஸ்ட் 02 ஆம் திகதி அருகம்பே பனாம தடாகத்தில் உலாவும்போது காயமடைந்த ஒரு வெளிநாட்டவருக்கு கடற்படை சிகிச்சை அளித்தது.

அருகம்பே பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டவர் பனாம தடாகத்தின் நீரில் உலாவும்போது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டார்.இந்த விபத்தை கவனித்த கடற்படையின் விரைவான மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவினர் (4RU), வெளிநாட்டவரை உடனடியாக மீட்டது.

விபத்து காரணமாக அந்த நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. அதன்படி, அவர் (தென்கிழக்கு) கட்டளை கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடற்படையின் மருத்துவர்களால் வழங்கப்பட்ட சிகிச்சையின் பின்னர் மாலை வெளியேற்றப்பட்டார்.

காயமடைந்த நபர் ஒரு ரஷ்ய நாட்டவர், சுமார் 30 வயது.