கடற்படைத் தளபதியின் ரஷ்ய வருகை

ரஷ்ய கடற்படையின் நீட்டிக்கப்பட்ட அழைப்பிற்கு இணங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, 2019 ஜூலை 27 முதல் 30 வரை ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது கடற்படைத் தளபதி புனித பீட்டர்பர்க்கில் கடற்படை அணிவகுப்பில் கலந்து கொண்டார், இது ரஷ்யாவின் கடலில் நடந்த பெரிய அளவிலான சர்வதேச நிகழ்வாக கருதப்படுகிறது.

மேலும், வைஸ் அட்மிரல் சில்வா ரஷ்ய கடற்படையின் தலைமைத் தளபதி அட்மிரல் நிகோலாய் ஏ எவ்மெனோவுடன் இருதரப்பு விவாதங்களையும் நடத்தினார். கடற்படை ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு கடற்படை உறவுகளை பலப்படுத்த இந்த விவாதங்கள் உதவின. இந்த சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் நினைவு பரிசுகளும் பரிமாறப்பட்டன.

சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, கடற்படைத் தளபதி புனித பீட்டர்பர்க்கில் உள்ள கடற்படை அருங்காட்சியகம் மற்றும் சில ரஷ்ய கடற்படைக் கப்பல்களையும் பார்வையிட்டார்.