வெளிச்செல்லும் ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் வெளியேறும் பாதுகாப்பு ஆலோசகர், கேப்டன் அட்சுஹிரோ மோரேரோ அவர்கள் இன்று (ஜூலை 22) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இக் கூட்டத்தின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்கள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர், மேலும் கேப்டன் மோரேரோ தனது பதவிக் காலத்தில் நல்லுறவு உறவுக்காக கடற்படைத் தளபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இன் நிகழ்வுக்காக, இலங்கையின் ஜப்பான் தூதரகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர், லெப்டினன்ட் காகு ஃபுகயுரா கலந்து கொண்டார்.. இந்த சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.