‘SPEAR’ பயிற்சிகள் குறித்து கடற்படையின் பேச்சு வார்தை

லெப்டினன்ட் கேர்ணல் ரிச்சர்ட் ஜேம்ஸ் மால்ட்பி தலைமையிலான ஐக்கிய இராச்சிய கூட்டுப் படைத் தலைமையகத்தின் செயல்பாட்டு தொடர்பு மற்றும் மறுமதிப்பீட்டு குழுவின் அதிகாரிகள் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவை 2019 ஜூலை 17 அன்று சந்தித்தனர்.

அடுத்த அக்டோபரில் நடத்த திட்டமிடப்பட்ட ‘SPEAR’ கூட்டுப் பயிற்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இலர்கள் விவாதித்தனர். இன் நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் மூத்த கடற்படை அதிகாரிகள், ராயல் பிரிட்டிஷ் இராணுவத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.