ரூமஸ்ஸல கடற்கரையில் காணாமல் போன இளைஞர்களின் ஒரு சடலம் கரக்கு கொண்டு வர கடற்படை உதவி

காலி ரூமஸ்ஸல கடற்கரையில் கடல் அலையில் அடித்துச் சென்று காணாமல் போன இளைஞர்களில் ஒருவரின் சடலம் இன்று (ஜூலை 18) கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளது.

ரூமஸ்ஸல கடற்கரையில் புகைப்படம் எடுக்கச் சென்ற இரண்டு (02) இளைஞர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ளதாக ஹபராதூவ பொலிஸாரினால் கடற்படைக்கு தெரிவித்த பின் தெற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட நிர் முழ்கி குழுவை கடற்படை அனுப்பியுள்ளது. அதன்படி, இந்த இளைஞர்களை தேடி கடந்த சில நாட்களாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, இன்று காலை ரூமஸ்ஸல கடலில் மிதக்கும் போது இளைஞர்களில் ஒருவரின் உடலை கடற்படை மீட்டெடுக்க முடிந்ததுடன் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சடலம் ஹபராடுவா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.