களுத்துறை கலிடோ கடற்கரைக்கு சொந்தமான கடலில் மூழ்கிய நபர்கள் கடற்படையால் மீட்பு

2019 ஜூலை 14 ஆம் திகதி களுத்துறை காலிடோ கடற்கரைக்கு சொந்தமான கடலில் மூழ்கிய 06 பேர் அடங்கிய குழுவை கடற்படை வீரர்களினால் மீட்கப்பட்டது.

அதன் படி, இந்த மக்கள் குழு காலிடோ சொந்தமான கடலில் குளிக்கச் சென்று கடினமான கடல் அலையில் சிக்கியது. அவர்கள் நீரில் மூழ்குவதைக் கவனித்த அப் பகுதியில் வசிப்பவர்கள் கடற்படையின் விரைவான மறுமொழி மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவு (4RU) பணியாளர்களுக்கு தெரிவித்தனர்.

இன் நிலைமைக்கு உடனடியாக பதிலளித்து, கடற்படை வீரர்கள் அந்த இடத்திற்கு விரைந்து வந்து, அந்தக் குழுவை நீரில் இருந்து மீட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் 24 முதல் 30 வயது வரையிலான களுத்துராவில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டன.

இதற்கிடையில், தீவின் அழகிய கடற்கரைகளுக்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக இலங்கை கடற்படை நாடு முழுவதும் உயிர் காக்கும் குழுக்களை அனுப்பியுள்ளது.