கேரள கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் புத்தலம் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இணைந்து 2019 ஜூலை 15 ஆம் திகதி ரஸ்நாயக்கபுர, கடிகாவ பகுதியில் நடத்திய சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் 02 பேரை கைது செய்யப்பட்டது.

அதன்படி, புத்தலம் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகளுடன் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் கடிகாவ பகுதியில் நடத்திய சோதனையின் போது 1.355 கிலோ கேரள கஞ்சா மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற இருவரை இவ்வாரு கைது செய்தனர். சந்தேக நபர்கள் 25 மற்றும் 40 வயதுடைய வீரபொகுன மற்றும் மிரிஹேனகம பகுதிகளில் வசிப்பவர்கள் என கணடரியப்பட்டன.

குறித்த சந்தேகநபர்கள், கேரள கஞ்சா பொதி மற்றும் மோட்டார் சைக்கல் மேலதிக சட்ட நடவடிக்கை களுக்காக புத்தலம் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகளினால் ரஸ்நாயக்கபுர போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.