130 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கடற்படையினரால் கைது

2019 ஜூலை 13 ஆம் திகதி புல்முடே கோகிலாய் பகுதியில் 130 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 02 சந்தேக நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் கோகிலாய் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, இந்த சட்டவிரோத மதுபானம் தயாரித்த இரண்டு சந்தேக நபர்களுடன் 130 லீட்டர் மதுபானம் கடற்படை காவலில் எடுக்கப்பட்டது. மேலும், 02 பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 37 மற்றும் 42 வயதுடைய மதுரன்குலிய மற்றும் ராகம பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களும் உடமைகளும் கொக்கிலாய் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.