ஹெராயினுடன் நபரொருவர் கடற்படையினரால் கைது

திருகோணமலை சல்பேயாறு பகுதியில் 1.630 கிராம் ஹெராயின் கொண்ட ஒருவரை ஜூலை 12 ஆம் திகதி இலங்கை கடற்படை மற்றும் போலீசார் இணைந்து கைது செய்துள்ளனர்.

கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை வீரர்கள், குச்சவேலி காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து சல்பேயாறு பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1.630 கிராம் ஹெராயின் சந்தேக நபரிடம் வைத்திருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.இந்த போதைப்பொருளை சந்தேக நபர் கொழும்பிலிருந்து குச்சவேலிக்கு கொண்டு செல்லும் போதே இவ்வாறு கடற்படையினரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொழும்பு 14 இல் வசிக்கும் 53 வயதுடைவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதன் பின் ஹெராயினுடன் சந்தேகநபர் குச்சவெலி பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.