புத்தளம் நகரத்தில் உள்ள ஒரு நிலத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க கடற்படை உதவி

இலங்கை கடற்படை தீயணைப்பு வீரர்கள் 2019 ஜூலை 11 ஆம் திகதி புத்தளம் நகரில் கட்டிடங்களால் நெரிசலான ஸ்கிராப் மற்றும் எஞ்சியுள்ளவற்றை சேகரிக்கப் பயன்படுத்தப்பட்ட நிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தை முற்றிலுமாகத் தணிக்க உதவி வழங்கினர்.

அதன்படி, பேரிடர் மேலாண்மை மையத்தின் தீ பற்றிய தகவல் கிடைத்ததும், வடமேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு தீயணைப்பு குழு உடனடியாக அந்த இடத்திற்கு தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட அனுப்பி வைக்கப்பட்டது.

ஒரு தீயணைப்பு இயந்திரம் மற்றும் நீர் பவுசரைக் கொண்ட கடற்படை தீயணைப்புக் குழு கடுமையான முயற்சியை மேற்கொண்டது மற்றும் பரவிய தீப்பிழம்புகளை முழுவதுமாக அணைக்க முடிந்தது.