கடற்படைத் தளபதியால் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல கட்டளை அணிவகுப்பு ஆய்வு செய்யப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களால் இன்று (ஜூலை 10) மேற்கு கடற்படை கட்டளையின் அணிவகுப்பு ஆய்வு இலங்கை கடற்படை கப்பல் ரங்கலவில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது.

அதப்படி மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, கடற்படைத் தளபதியை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு வரவேற்றார். அதன்பின் மேற்கு கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து கடற்படை வீரர்களையும் வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா உரையாற்றினார்.

இச் சந்தர்ப்பத்திற்கு மேற்கு கடற்படை பகுதி துணைத் தளபதி, துறைகளின் தலைவர்கள், மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.