ஹெரோயினுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் ஜூலை 01 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை பகுதியில் வைத்து 310 கிராம் ஹெரோயினுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக தென் கடற்படை கட்டளையின் கடற்படையினர் ஹம்பாந்தோட்டை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது இவர்களை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர். குறித்த ஹெரோயின் பொதி விற்பனைக்காக முச்சக்ர வண்டி மூலம் இவர்கள் கொண்டு செல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபர்கள் ஹம்பாந்தோட்டை பகுதியில் வசிக்கின்ற 22 மற்றும் 33 வயதானவர்களாக கண்டரியப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் மற்றும் ஹெரோயின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை ஊழல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.