இந்திய கடற்படையின் கப்பல் ரன்வீர் வெற்றிகரமான சுற்றுப்பயணத்தை முடித்தது

ஜூன் 18 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு நல்லெண்ண பயணமாக வந்த இந்திய கடற்படை கப்பல் ரன்வீர், இன்று (ஜூன் 20) தனது உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியேறியது.

அங்கு, இலங்கை கடற்படை மரபுகளுக்கு இணங்க புறப்படும் கப்பலுக்கு இலங்கை கடற்படை வழக்கமாக விடைபெற்றல் நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த பல நிகழ்வுகளில் இக் கப்பலின் குழுவினர் பங்கேற்றனர்.